முதியோர் உதவித்தொகை ரூ.1200-இல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என வாக்குறுதி வழங்கியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, இன்று கரூர் நகரில் உள்ள உழவர் சந்தை பகுதியில், மாண்புமிகு V.செந்தில்பாலாஜி அவர்கள், கரூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. ஆசி.எம். தியாகராஜன் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த பரப்புரையின் போது, “தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து கொண்டு செல்லும் வலிமை கொண்டது உதயசூரியன் சின்னமே” என வலியுறுத்திய அவர், பொதுமக்களிடம் பெருமளவில் ஆதரவை கோரினார். மேலும், முதியோர் நலனுக்காக உதவித்தொகை உயர்வு போன்ற சமூக நலத்திட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமைக் கட்சி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு வேகம் அதிகரித்து வருவது, கரூர் தொகுதியில் தேர்தல் சூழலை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.